கிசுகிசு : ஆச்சார கட்சி என்று நம்பி போனால், அங்கே தான் சில்லு வண்டுகளின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது என பூ கட்சியை நோக்கி சென்ற பெரும்பாலான மலர்களின் குமுறலாக இருக்கிறதாம். டீ கடைக்கு போன புரோடியூசரிடம், இயக்குநர் என சொல்லிக் கொண்டு ஒருவர் பூ கட்சி மேட்டர் என்ற இந்த கதையை சொல்ல வந்திருக்கிறார். என்னப்பா சொல்ற என ஆர்வத்துடன் புரோடியூசர் கேட்க மொத்த மேட்டரையும் ஒரு டீ குடிப்பதற்குள் அவர் சொல்லிவிட்டாராம். சார் கேளுங்க என ஆரம்பித்த இயக்குநர், "சார்...சூரியனும், இலையும் மோசம், அந்த பக்கம் போகாதீங்க... நாங்க அண்ட சராசரத்தையே ஆளுபவருக்கு அத்தாரிட்டியாக இருப்பதால், எங்களை நம்பி வந்தால் உங்களுக்கும் பாதுகாப்பு, நம்ம கூட்டத்துக்கே பாதுகாப்பு என அழைத்த பூ கட்சியின் நாற்றம் பொதுவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்கள் பூ கட்சிக்குள் அமைதியாக இருந்த மூத்த வண்டுகளே, சில்லு வண்டுகளின் சேட்டைகளை அம்பலமாக்க எத்தனித்திருப்பது தான் ஹைலைட். நம்பிக்கையோடு சென்ற மலர்கள் எல்லாம் சில்லு வண்டுகளின் சேட்டைகளை சகித்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால், அங்கு சென்ற மலர்களில் சிலர் வண்டுகளின் மோப்பத்தை தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்களாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக்


எது எப்படியோ ’பூ’ வாசம் பரவினால் போதும் என அமைதியாக இருந்த மூத்த வண்டுகள், தாங்கள் ஓரங்கட்டப்படுவதையும், டார்கெட் செய்யப்படுவதையும் உணர்ந்தவுடன் இனி கப்சிப் என்று இருந்தால் வேலைக்கு ஆகாது என பார்முக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் ’மோப்பம்’ விட்டு சில்லு வண்டுகளிடம் சிக்கிக் கொண்டுவிட்டதால், அவர்கள் சரண்டர் மோடில் இருந்து பின்வாங்குவதாக இல்லையாம். இந்த விஷயத்தில் சிக்காதவர்கள் எப்படியாவது சில்லு வண்டுகளை ராஜா வண்டுவிடம் சிக்க வைத்துவிடலாம் என பிளான்போட்டுக் கொண்டிருக்க, அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என தெரிந்துவிட்டது. சரி என்னதான் செய்யலாம் என யோசித்து, கடைசியாக தங்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் மூலம் எல்லா விஷயங்களையும் கசியவிட்டுவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். 


அதன்தொடர்ச்சியாக தான் பூ கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளின் மோப்ப விஷயம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பான பல விஷயங்களை வெளியான நிலையில், ராஜா வண்டுகள் இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம். காரணம், நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்டை கொடுக்கிறோம், அதனால் எங்கள் மீது வரும் பிராதுகளை தூசு தட்டாமல் கிடப்பில் போட்டுவிடுங்கள் என சில்லு வண்டுகள் செட்டில் மென்ட் பேசிவிட்டார்களாம். அதன்பின்னரே, உள்ளடி வேலைகளை பார்த்து மூத்த வண்டுகளை ஓரம்கட்டிவிட்டு தனி ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன சில்லு வண்டுகள். தங்கள் மீது நடவடிக்கை ஏதும் வராது என்கிற உத்தரவாதமும் கிடைத்துவிட்டதால் சகட்டு மேனிக்கு மலர்களை மோப்பம் விட்டிருக்கின்றனர். 


மலர்களோ, என்ன செய்வது என தெரியாமல் வண்டுகளின் மோப்ப தொல்லை தாங்க முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வெளி வேஷத்தை நம்பி இங்க வந்திராதீங்க, வர விரும்பும் மலர்களுக்கு தடையும் போடுகிறார்களாம். ஒட்டுமொத்தமாக பூவின் மோப்ப நாற்றம் பரவிக் கொண்டிருக்க, இந்த மேட்டர் எல்லாம் எங்க லீக்காகிறது என சில்லுவண்டுகள் யோசித்து, தங்களுக்கு எதிரான மூத்த வண்டுகளையும் சேர்த்து நோட்டம் விடுகிறார்களாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்ட மூத்த வண்டுகள், இனி வரும் நாட்களில் மோப்ப விஷயத்தை தவிர டீலிங், கமிஷன் சமாச்சாரங்களையும் கசியவிட இருக்கிறார்களாம்."சார்.. இங்க தான் டிவிஸ்டே இருக்கு என இயக்குநர் சொல்ல, புரோடியூசர் ‘ சார் இந்த கதை எனக்கு மட்டுமில்ல ஊருக்கே தெரியும்... புது மேட்டரா இருந்தா கொண்டு வாங்க’-னு சொல்லி அனுப்பிவிட்டாராம். 


மேலும் படிக்க | விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ