தேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுதும் 6,96 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டு 1. 60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் 1.3 லட்சர் பேர் ஈடுபட்டனர். 


இந்த தேர்வை கண்காணிக்க 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்  தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவு பெற்றது.


9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 20 லட்சம் பேரில், 3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.