தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரி மடுகரை, வில்லியனூர், மதகடிகப்பட்டு,தவளகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


தமிழகத்தில் சென்னை, மதுரை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி,அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


இந்நிலையில் கனமழை காரணத்தால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை, சேலம், நாகை, கடலூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.