தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வரும் 6ஆம் தேதி வரை இந்த கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை வானில ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்:


அதிகரித்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழையினால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து தப்பிக்க மாவட்ட நிர்வாகங்கள் அதற்குறிய முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. 


எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?


அதிகாலை முதலே இன்று தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பிற மாவட்டங்கலை விட அதிக கனமழை பெய்து வருவதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! காரணம் என்ன?


குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை:


சென்னை மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை, பலத்த மழையாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமையையை பொறுத்தவரை கடந்த அக்டோபார் 1ஆம் தேதி ஆரம்பித்த பருவமழை தற்போது வரை 19 செ.மீ பெய்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை நாட்கள் மழை பெய்தும் 12 செ.மீ மழை மட்டுமே அதிவாகியுள்ளது. இதனால், பிற பருவமழை காலங்களை விட, இந்த ஆண்டு 40% குறைவாகவே மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். 


அதிகபட்ச மழை பதிவானது எங்கே?


தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை அய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேசினார். அப்போது, தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுலும் மழை பெய்து வருவதாக தெரிவித்தார். அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் கூறியிருந்தார். 


24 மணி நேரத்தில் நடந்த வானிலை மாற்றங்கள்:


தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்கலிலும், வடதமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்?


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ