தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையின் காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.