கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.


இதனிடையே புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் தமிழக அரசை பாராட்டினர். அதேவேளையில் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் தேவையான அத்தியாச பொருட்களும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் நடைபெற வில்லை என தமிழக அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவும், பாதிப்படைந்த மக்களை சந்திக்கவும் செல்லவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் எழுந்தது.


இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டனர். 


இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சாலை வழியாக சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், ஹெலிகாப்டரில் பறந்தப்படி பார்வையிடுவதா? என கேள்விகள் எழுப்பட்டன. மேலும் மக்களை நேரில் சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார் என்ற குற்றம்சாட்டி அவர்மீது வைக்கப்பட்டது.


இந்நிலையில், கஜா புயல் பாதிப்பால் தமிழகத்திற்கு ஏற்ப்பட்ட பாதிப்புக்களை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கவும், தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்கக்கோரியும், டெல்லியில் நேற்று காலை 9.45 மணியளவில் பிரதமர் மோடியை தமிழக முதலைமைச்சர் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு காலை மற்றும் மாலை என இரண்டு முறை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்பொழுது அவர் கூறியதாவது, கஜா புயல் பாதிப்பால், தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் எனக் காலையில் கூறினார்.


மீண்டும் மலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் நாளை(நவம்பர் 23) தமிழகம் வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்து பின்னர் எந்ததெந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படும் எனக்கூறினார்.