சென்னை ஆவடி நந்தவனம் மேட்டுரை சேர்ந்தவர் ஜான்சன். 30 வயதாகும் இவர் சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட 81-வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை அள்ளும் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த 25 வயதான சாரம்மாள் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த மே மாதம் பட்டாபிராமில் தனியாக வீடு ஒன்றை வாடகை எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டிலேயே தனது காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டுள்ளார் ஜான்சன். தாலி கட்டும் தருணத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலியுடன் ஆசை ஆசையாய் குடும்பம் நடத்தி வந்த ஜான்சனுக்கு அடுத்த சில வாரங்களிலேயே பேரிடியாய் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது சாரம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காதல் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சாரம்மாளோ வாழ்ந்தால் உன்னுடன் தான் வாழ்வேன்.. என் குடும்பம் எனக்கு தேவையில்லை என எவ்வளவோ கூறியுள்ளார். ஆனால் மனைவியின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத ஜான்சன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். 



மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?


சிறிது நாட்களுக்குப் பிறகு ஜான்சன் அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இதை அறிந்த சாரம்மாள் அம்பத்தூரில் உள்ள ஜான்சன் வீட்டிற்கு நேரடியாக சென்று, நான் உன்னோடு தான் வாழ்வேன் உன்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் என கூறியதாக தெரிகிறது. ஜான்சனோ என்னால் உன்னுடன் வாழ முடியாது என கூறி அந்த வீட்டையும் காலிசெய்துள்ளார். ஜான்சன் எவ்வளவு தான் விலகிச் சென்றாலும் துரத்திச் சென்று சாரம்மாள் அவருக்கு லவ் டார்சர் கொடுத்துள்ளார். அடிக்கடி போன் செய்து தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 


சாரம்மாளுக்கு தெரியாமல் ஜான்சன் ஆவடியை அடுத்த ஜீவா நகரில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து குடியேறியுள்ளார். இதனை அறிந்த சாரம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன் நேரடியாக அந்த வீட்டிற்க்கே வந்து நான் உன்னோடு தான் வாழ்வேன் என சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஜான்சன் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து சாரம்மாளின் தொண்டையில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த சாரம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். கொலையை மறைப்பதற்கு சாக்கு பை ஒன்றை எடுத்து அதில் சாரம்மாளை மடித்து கட்டி வீட்டில் வைத்து விட்டு வீட்டை பூட்டி வெளியே சென்றுள்ளார். 


சடலத்தை அப்புறப்படுத்த அதனை வெளியே கொண்டு வந்து ரயில் தண்டவாளத்திலோ அல்லது குப்பையிலோ வீசி விடலாம் என திட்டம் திட்டி உள்ளார். அன்று இரவே சடலமானது உப்பி வெடிக்கும் நிலையில் இருந்துள்ளது. கொலை செய்து 2 நாட்கள் கழித்து அதாவது கடந்த 18-ம் தேதி ஆவடி காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சாரம்மாளை கொலை செய்ததை ஒத்துக்கொண்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரம்மாள் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஜான்சனிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சாரம்மாள் தனக்கு திருமணம் ஆனதையும், இரண்டு மகன்கள் உள்ளதையும் மறைத்துவிட்டு தன்னை காதலித்து திருமணம் செய்தது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதனால் தான் அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் ஒரு குடும்பமும் இருப்பதை அறிந்ததால், ஏமாற்றமடைந்த காதலன் காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னையையே உலுக்கியுள்ளது.


மேலும் படிக்க | ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ