எனது மகனின் வெற்றியை தடுக்கவே வருமான வரி துறை சோதனை நடத்தப்படுகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தினர். தற்போது இந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.


இதன்பின் செய்தியாளர்கள் முன் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன்,


சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல என்றும் எங்களுடன் நேருக்கு நேர் மோதுவதை விட்டுவிட்டு முதுகில் குத்துகிறார்கள் என்றும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமக உள்ளது. அதை தடுக்கவே இந்த வருவமான வரித்துறை சோதனை என திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.