கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம், கேரளா, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோகுலம் சிட் பைனாஸ் இயங்கி வருகிறது. இன்று கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.


மேலும் கேரளா, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.