சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றனர். 


சில இடங்களில் சுப்ரீம் கோர்ட் தடையை மீறியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.


 



 


இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.