சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.


இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.


அப்போது, ஜெயலலிதாவிற்கு  சிகிச்சையின்போது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 


எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வருவதால் தற்போது விளக்கம் அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.