முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.


பின்னர் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரவும் பகலும் பாராமால் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இன்று அடக்கம் செய்யப்பட முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ் - ரெஜூலா ப்ரீத்தி ஜோடிக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் இன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு மலர்தூவி உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..