தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி; புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் ஆகியோர் நியமனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி மற்றும் புதிய தலைமை செயலராக கே.சண்முகம் ஆகியோரை நியமித்து தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் புதிய தலைமை செயலராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஜே.கே.திரிபாதி அடுத்த சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளளார். திரிபாதி 1985 IAS பேட்ச்சை சேர்ந்தவர்.