வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்தது, இந்நிலையில், நேற்று வெளியான அறிக்கையில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று 11வது நாளாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 


தமிழக அரசு சார்பில், திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.