திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.  


இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலே மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் இதுவரை காவேரி மருத்துவமனைக்கு வரவில்லை. 


இதையடுத்து, இன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் செயல்பாடு குறைந்து வருவதாகவும், இதனால் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானதையடுத்து பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 


இவர்களை தொடர்ந்து திமுக தலைவரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் முதல் முறையாக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.  


மருத்துவமனைக்கு தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள் நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 


திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் பத்துநாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று திடீர் என தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதா என பலரும் குழம்பி வருகின்றனர்.