சென்னையில் இன்று நடைபெற உள்ள கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தேசியக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதிக்கு இன்று மாலை புகழஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் புகழ்வணக்கம் செலுத்தவுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். 


தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா , இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் தலைவர் காதர் முகைதீன், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ ப்ரைன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க. தென்சென்னை மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் நன்றியுரையாற்றுகிறார்.