கோவை மாணவி கடந்த சில நாட்கள் முன்பு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியின் ஆசிரியர் பள்ளி முதல்வர் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் மேலும் கடிதத்தின் உண்மைத் தன்மையை அறியும் சோதனையில் ஈடுபட்டனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது பெண்ணுடைய கையெழுத்து தானா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கத்தோடு தனிப்படை போலீசார் தீவிரமாக இந்த வழக்கை கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மாணவி வீடு, பள்ளி முதல்வர் அறை, ஆசிரியர் வீடு , மாணவியின் நண்பர் வீடு ஆகிய 4 இடங்களில் தனிப்படை போலீஸ் சோதனை நடத்தியுள்ளது. 2 செல்போன், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் உண்மை தன்மையை கண்டறியும் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். 


ALSO READ | இனி இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு


மேலும் மாணவிக்கு யார் யாரெல்லாம் தொல்லை கொடுத்து உள்ளார்கள் என்ற உண்மை தன்மையை கண்டறியும் நோக்கில் போலீசார் இந்த சோதனையை விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டதாக  தெரிகிறது.


இதனிடையே கோவை மாநகர காவல் துறையினர் மாணவி தற்கொலை வழக்கில் மாணவியின் அடையாளங்களை வெளியிட்டதற்காக 48  யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) பிரிவின் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR