கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கடைவீதியில் வைத்து கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சென்னிய மங்கலத்தைச் சேர்ந்த செந்தில் நாதனை கட்ட ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான மாரியப்பன், ஆறுமுகம் ,மனோகரன், செல்வம் ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை  கும்பகோணத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கில் அச்சம் காரணமாக சாட்சி கூற யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து சாட்சியங்களுக்கு தக்க பாதுகாப்பு அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



இன்று வழக்கை விசாரித்த நீதிபதி,குற்றஞ்சாட்டப்பட்ட கட்டை ராஜா மீது தொடரப்பட்ட குற்றங்களுக்கு சாட்சிகள் தெளிவாக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.


வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் மாரியப்பன் ,மனோகரன் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் நீதிமன்ற வரலாற்றில் முதல்முதலாக விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அரியலூரில் பரபரப்பு; காவல் நிலையத்தில் தஞ்சம் அடைத்த காதல் ஜோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


மேலும் படிக்க | மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை, சென்னையில் சிக்கிய கும்பல்


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR