கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன், 1000 எண்களை ஆங்கிலத்தில்  தலைகீழாக பதினைந்து நிமிடங்கள் 57 வினாடிகளில் கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை, தெலுங்குபாளையம்  பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் இளைய மகன் பிரித்திவ். பனிரேண்டாம்  வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளை  செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.குறிப்பாக தலைகீழாக எழுதுவதில் சாதனை படைத்த, பிரித்திவின்  அரிய திறமையைக் கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால்,ஒன்று முதல் ஆயிரம் வரையிலான எண்களை ஆங்கிலத்தில் தலைகீழாக கூறி அசத்தியுள்ளார்.


ஆயிரம் எண்கள் துவங்கி தலைகீழாக ஓன்று வரை ஆங்கிலத்தில்  பதினைந்து நிமிடங்கள் 57 விநாடிகளில்  கூறிய இவரது இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.


மேலும் படிக்க | அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் மேலிட உத்தரவு - சிதம்பரம்


இவரது சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் மற்றும்  கலை பண்பாட்டு துறையின் தீர்ப்பாளர் சிவ முருகன் மாணவன் பிரித்திவிற்கு  பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர். மாணவன் பிரித்திவ் ஏழாவது படிக்கும்போதே மரங்களை காப்போம் எனும் தலைப்பில் பென்சில் பெட்டிகளை கொண்டு சாதனை புரிந்தது முதல் இது வரை  எட்டு உலக சாதனைகள் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.. அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ