சிவகாசி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த  தமிழ்செல்வி (வயது 54),தனலட்சுமி (வயது 28)இருவரும் தாய்- மகள் ஆவார்கள். இருவரும் இன்று  சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் ரயில்பாதை காந்திநகர் ரயில்வே தண்டவாளத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயற்கை உபாதைக்காக இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது பின்னாலிருந்து வேகமாக ரயில் வந்தத்தை கவனித்த மகள் தனலட்சுமி முன்னாள் நடந்து சென்று கொண்டிருந்த காது கேளாத வாய் பேச முடியாத தாயை ஓடி சென்று காப்பாற்ற முயன்றுள்ளார்.


மேலும் படிக்க | தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ விவகாரம் : பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி


முயற்சி பலனலிக்காத நிலையில் இருவரும்  ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாய், மகள்  இருவரின் உடலையும் கைப்பற்றிய ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் உடற்கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கழிவறை வசதி இல்லை..


கழிவறை வசதி இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் இயற்கை உபாதைக்காக சென்று ரயில் மோதி தாய் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ