Puducherry 9 Year Old Kid Got Molested In Sholai Nagar Body Recovered From Drainage : புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல், அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவரும் கூட்டு சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது உயிரிழந்தார். இதனிடையே நேற்று சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். இன்று சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காணாமல் போன 9 வயது குழந்தை:


புதுச்சேரி முத்தியால் பேட்டை, சோலை நகரை சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயது பெண் குழந்தை இருந்தார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். மார்ச் 2ஆம் தேதி (சனிக்கிழமை) கொலையாக்கப்பட்ட சிறுமி, அவரது வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இதையறிந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடிப்பார்த்துள்ளனர். பல மணி நேரங்கள் தேடியும் சிறும் கிடைக்காததால் பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், குழந்தை எங்கேயோ நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. 


சடலமாக மீட்பு:


எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், 4 நாட்களுக்கு மேலாகியும் அவர் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 5) சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அச்சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.


இருவர் கைது:


சிறுமி கொலை செய்யபட்ட வழக்கில், முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்ற 57 வயது நபரும், கருணாஸ் என்ற 19வயது வாலிபரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலட வலியுறுத்தியும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடலில் இறங்கி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


மேலும் படிக்க | கன்னியாகுமரியில் சாலையை சீரமைக்க கோரி போராட்டம்


குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. 


அந்த வகையில், சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தியும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த வேண்டும், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் கொலைக்கு நீதி பெற்ற தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவர்கள் திடீரென கடலில் இறங்கி சிறுமி ஆர்த்திக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் கடலில் இறங்கிய போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர் இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயில் மறியல் போராட்டம் நடத்தும் விவசாயிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ