தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு  கட்டண அடிப்ப்டையிலும் வழங்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தமிழ் நாடுபாடநுால் கழக தலைவராக, லியோனியை நியமித்து,  தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது 'பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு, பள்ளி கல்வி பதவி கொடுப்பதா என, பல தரப்பில் iஇருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.


லியோனி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஇஅதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneer Selvam), பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


ALSO READ | திமுக ஆட்சியில் முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்


அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  லியோனி நியமிக்கப்பட்டிருப்பது, அந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து உள்ளது. இதனால், கல்வி கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாக பேசுவது; அரசியல் கட்சி தலைவர்களை நா கூசும் வகையில் வசைபாடுவது; நாகரிகமற்ற, தவறான, ஒழுக்கமற்ற கருத்துகளை, மக்கள் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை, வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி. இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம், மாணவ - மாணவியரிடம் தவறான கருத்துகள், எடுத்து செல்லப்படும். எனவே மாணவ - மாணவியர் நலன் கருதி, லியோனி நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.


பாமக தலைவர் ராமதாஸும் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட் செய்தியில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.


இந்நிலையில் நேற்று காலை பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. லியோனி ஏன் வரவில்லை என்பததற்கான காரணமும் பாடநுால் கழகத்துக்கு அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், அவரது நியமனம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, தமிழக அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ALSO READ | பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR