கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று 2 மணி நேரமாக ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்பொழுது கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவதைப்பற்றி ஆலோசிக்கப்பட்டது என நற்பணி மன்ற நிர்வாகிகளை தெரிவித்தனர். 


பின்னர் கமல்ஹாசன் கூறியது, நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்வே நற்பணி மன்ற இயக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரமும், கடமையும் வந்துள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் கூறினார்.