பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலதிபர் அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தென்னிந்திய நடிகை அமலா பாலுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக நடன பள்ளி உரிமையாளர் அழகேசன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டார்.


தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையான அமலா பால், அடுத்த வாரம் மலேசியாவில் நடைப்பெறவுள்ள பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ளார். 


இந்நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கான ஒத்திகைய பயிற்சியினை, தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் செய்து வந்துள்ளார்.


இந்நிலையில் அந்த பள்ளிக்கு வந்த கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன், அமலா பாலிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த அமலா பால் அவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முத்திய நிலையில் இந்த பிரச்சனையினை முடிவுக்கு கொண்டுவர அமலா பால், அழகேசன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதனையடுத்து, அழகேசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


முன்னதாக இதேப்போல் பிரபல நடிகை பாவனா வழக்கு பூதகரமாக மாறியது அனைவரும் அறிந்ததே!