கடன் தொல்லையால் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 


போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடம் தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து அன்புசெழியன் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.