Madurai Crime Latest News: மதுரை பந்தடி பகுதியை சேர்ந்த துவாரகநாத் -மஞ்சுளா தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமையான (அக். 20) விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், கணவர் வாகனத்தை நிறுத்தி மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் நேரத்தில், அவரை பின்தொடர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேரில் ஒருவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முற்பட்டனர்.


மூன்றே முக்கால் பவுன் செயின்


மஞ்சுளா அவரது கழுத்தில் மூன்றே முக்கால் பவுன் தங்க செயினை அணிந்திருந்தார். அந்த நபர் செயினை பறிக்க முயன்றதில் மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தர என சாலையில் இழுத்தவரே வாகனத்தில் வேகமாக இயக்கி சென்றனர். இதில் செயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது. தற்போது இச்சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள்! ஷாக்கிங் வீடியோ


கணவனின் கண் முன்னே...


ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் மாட்டுத்தாவணி கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்துவிட்டு இளைப்பாற வீடு திரும்பிய நிலையில், அவர்களின் வீட்டு வாசலிலேயே மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது கணவனின் கண் முன்பாகவே மனைவியின் தங்களை நகையை பறித்து சென்றனர், பைக்கில் இருந்த கணவர் தடுமாறி கீழே விழுந்தார். அவர் எழுந்துவிடுவதற்கு அவரது மனைவி தரதரவென சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.