குழந்தையின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதையடுத்து இந்த வகை ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில், திருச்சியில் முதற்கட்ட விசாரணை இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. குழந்தைகள் ஆபாசப்படங்களை பரப்புவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் என்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் கூறியிருந்தனர். அந்த வகையில் திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இன்று அதிகாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரின் செல்ஃபோனை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கும் போலீசார் அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரை, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.