மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் வீட்டினுள் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை செங்குன்றம் காமராஜ் நகர் டிவிஎஸ் பாத்திமா தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். அவரது வயது 24. இவர் அதே பகுதியில் கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.


இந்தநிலையில் நேற்று மதியம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை இவர் மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் வீட்டினுள் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



 உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


மேலும் படிக்க | சிம்பு ஸ்டைலில் திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்


இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்


கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR