புதுச்சேரி அண்ணாசாலை அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டுநரான விழுப்புரம் காக்குப்பத்தைச் சேர்ந்த 38 வயதான ராஜா என்ற ராஜசேகர் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக 13 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர், அந்த சிறுமியின் மாமா தனக்கு மிக நெருக்கமானவர் என கூறி வலுக்கட்டாயமாக அச்சிறுமியை அழைத்து சென்று விழுப்புரம் மாவட்டம் காக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியுள்ளார். 


ALSO READ | தொழிலாளி மர்ம மரணம்; கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்! 


நான்காவது நாள் காலை மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்பு சிறுமியை புதுச்சேரியில் பஸ் நிலையம் அருகே இறக்கிவிட்டு வெளியில் சொல்ல கூடாது என மிரட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து  இதைப் பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


அந்த புகாரின் பேரில் போலீஸார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 



இவ்வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி செல்வநாதன்  முன்பாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. 


விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராஜா என்ற ராஜசேகருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூபாய்- 12 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.


ALSO READ | கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி; போலி நகைகளை வைத்த வங்கி காசாளர் கைது! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR