உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக அவரது மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சுதேஷ். இவருக்கு சதீஷ் உள்பட 3 மகன்கள் உள்ளனர். சுதேஷின் இரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்ட நிலையில் அவரது மூன்றாவது மகன் சதீஷ்க்கு வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 


 இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் சுதேஷ்க்கு இரு கால்களும் பறிபோயின. இதனால் அவருக்கு சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், அறுசை சிகிச்சைக்கு முன் தனது மகன் சதீஷின் திருமணத்தை பார்க்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார். 


இந்நிலையில் தந்தையின் ஆசை நிறைவேற்ற சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.