மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(53) . இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான மகாதேவன், அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கையில் கிடைக்கும் பணத்தை பாட்டிலுக்கு மட்டும் செலவு செய்யும் குணம் கொண்டவர், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கூட கொடுக்க முடியாத தந்தையாக காலத்தைக் கடத்தியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கிடையே, குடும்ப பாரத்தை அமுதாவே சுமந்து வந்திருக்கிறார். வேலைக்கு சென்று வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தியிருக்கிறார். தலை நிற்காமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் மகாதேவன் மனைவியிடம் சண்டையிட்டு தகராறில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் பணத்தையும் திருடி குடித்திருக்கிறார். இதனிடையே தான், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அமுதாவின் வலது கையை போதையில் ஏற்பட்ட தகராறில் உடைத்திருக்கிறார், மகாதேவன்.



இதனையடுத்து சம்பவத்தன்று, மனைவியிடம் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு பீர் பாட்டிலை வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்தவர், அதை தட்டி கேட்ட மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜ சோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். அப்போதுதான் அந்த பயங்கரம் அரங்கேறியது. மகனை கொலை செய்ய முயன்றவரைத் தடுத்த மனைவியையும் அரிவாளால் வெட்ட முயன்றிருக்கிறார்.



அப்போது அரிவாளை பிடுங்கிய அமுதா கணவரின் கழுத்தில் ஆழமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று கணவனை கொன்று விட்டதாக சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகாதேவன் குத்தியதில் காயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் படிக்க | கணவரின் ஒர்க்‌ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் - கட்டிலுக்காக கொலைகாரியான கதை


தொடர்ந்து அமுதா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் கொலை செய்ய முயன்ற கணவரை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | OTP நம்பரை சொல்ல இவ்ளோ லேட்டா? - ஆத்திரத்தில் ஐடி ஊழியரை கொன்ற ஓலா ஓட்டுநர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR