மதுரை மாவட்டம்  டி.கல்லுப்பட்டியில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் டி மூர்த்தி ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் பேசிய அமைச்சர் மூர்த்தி, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கூட பணம் கொடுக்காமல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம். மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?


மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள், விருதுநகர் பாராளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் உள்ளன. இந்த தொகுதிகளில் நிற்கும் திமுக வேட்பாளர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார். இதனையடுத்து அமைச்சர் கேஎன் நேரு பேசினார். அவர் பேசும்போது, தலைவரின் சாதனைகளை சொல்லாமல் போனால் அமைச்சராவதற்கே தகுதியில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக இருந்து வருகிறார்.


மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். மோடி மாதந்தோறும் தமிழகம் வருகிறார். மோடி பேசியபோது தேர்தலுக்கு பின் திமுக இருக்காது என சொல்லியுள்ளார். 


மோடி மட்டுமல்ல திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என பேசினார். மதுரைக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் வரவுள்ளது என கூறிய அமைச்சர் கேஎன் நேரு, மூன்று ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறினார்.


மத்திய அரசு லஞ்ச ஒழிப்பு துறை, அமலாக்கதுறை என தமிழக அரசை மிரட்ட பார்க்கின்றார்கள். ஆனால் நமது முதலமைச்சர் அதை எதிர்த்து போராடி வருகிறார். அமைச்சர் மூர்த்தி பதிவுத் துறையின் மூலம் அதிக வருமானங்களை கொடுப்பதாகவும் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார். பணம் கொடுக்கும் பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார். உங்களுக்காக உதவும் முதல்வருக்கு உங்கள் ஆதரவு வேண்டும். உங்கள் ஆதரவு தொடருமேயானால் அடுத்த 5 ஆண்டு மட்டுமல்ல 50 ஆண்டிற்கும் ஸ்டாலின் தான் முதல்வர் என அமைச்சர் நேரு தனது பேச்சை நிறைவு செய்தார்.


மேலும் படிக்க | Lok Sabha Election 2024: இதற்காகத்தான் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ