திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  சாமி தரிசனம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு பிரசாதங்களை வழங்கினார். 


ரங்கநாயக்கர் மண்டபத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லட்டு, தீர்த்தப் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றபோது அவர், ‘‘கோவிலுக்கு வந்த இடத்தில் எந்தவித அரசியல் பேச விரும்பவில்லை’’ எனக் கூறி புறப்பட்டார்.