தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து திமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது:


திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று காலை, அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


அத்துடன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட எச்.வசந்தகுமார், எம்.எல்.ஏ., கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத்,  மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் கழகத் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


அதுபோது கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.


இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.