சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக மற்றும் அதிமுக அரசின் ஆதிக்கப்போக்கை எதிர்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ / மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.


எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.



புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு.


மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற "வரைவு அறிக்கை" மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூரு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.


தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு" என குறிப்பிட்டுள்ளார்.