திருச்சியில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தமிழக பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் வரும்போது எல்லாம் மக்கள் நலனுக்காக திட்டங்களை துவங்கி வைத்து கொண்டு இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!


இந்த கூட்டமானது தேர்தலில் பூத் கமிட்டிக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மத்திய அரசினுடைய பயனாளிகள் 43 கோடி பயனாளிகள் இருக்கின்றனர். அவர்களை பட்டியல் எடுத்து நேரடியாக சந்தித்து, வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வைப்பது குறித்த செயல்பாடுகளை பேசி வருகிறோம். பிரதமர் வரவேற்பிற்கு வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் இருப்பது அரசியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தென்  மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் அரசின் செயல்பாடுகளில் பொது மக்களுக்கு ஒரு அதிருப்தி உள்ளது. பிரதமர் வருகை முன்னிட்டு வணக்கம் மோடி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. 


இதன் காரணமாக தமிழக முதல்வர் பேசும் பொழுது கோஷம் எழுப்பப்பட்டது. தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டது என்பது பாதுகாப்பிற்காக வாகனங்கள் வாங்குவது என்பதில் என்னுடைய தலையீடு இல்லை. ஆனால் வெள்ள பாதிப்பு சென்னையில் ஏற்பட்டபோது 92 சதவீதம் பணிகள் முடிவடைந்தது என கூறிவிட்டு, பின்னர் 42% பணிகள் மட்டுமே முடிவடைந்தது எனக்கூறி உள்ளனர். ஊழல் என்பது நிறைந்து காணப்படுகிறது. அமலாக்கத் துறையின் ஆதாரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. மணல் திருட்டில் 4000 கோடி ஊழல் நடந்துள்ளது. 


சர்க்கரை என்னாச்சு என்றால் எறும்பு தின்னு விட்டது என்றும், சாக்கு எங்கே என்று கேட்டால் கரையான் தின்றுவிட்டது என கூறி ஊழல் செய்தனர். ஆனால் எங்கள் அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என திமுகவினர் மார் தட்டி கொண்டனர். தற்பொழுது ஒவ்வொருவராக மாட்டிக் கொண்டு வருகின்றனர். பொன்முடி சுபமுகூர்த்தத்தில் அவரை வழி அனுப்பி வைத்துள்ளோம். இதேபோல் அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் உள்ளே போவார்கள். ஆனால் திருச்சியா? அல்லது வேறு எங்காவதா? என்பது என்பது பற்றி எனக்கு தெரியாது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் கட்சியும் இருப்பதால் அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கின்றன." என தெரிவித்தார். 


மேலும் படிக்க | டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ