கோவையில் அ.தி.மு.க கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அணுராதா. 30 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு செல்வதற்காக, அணுராதா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதில் விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக வாகனத்தை சடன் பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.


இதில் வாகனம் சறுக்கியதில் வாகனத்துடன் அணுராதா கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அணுராதா உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.