சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய இயலாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது. மேலும் செம்மரக்கடத்தலில் கைதான 32 பேரும் அப்பாவிகள் அல்ல. அவர் கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது. செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


32 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களை விடுதலை செய்ய இயலாது. இது பற்றி ஆந்திர அரசு தமிழக அரசுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும். செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.