சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,289 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,814 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,842 ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 10 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,814 -ஐ எட்டியுள்ளது. 


ALSO READ | குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,421 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,29,201 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,37,548 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,289 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  



இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,289


• இன்றைய மரணங்கள் - 18


• மொத்த பாதிப்பு -  26,80,857


• இன்றைய டிஸ்சார்ஜ் -  1,421


• இன்றைய சோதனைகள் - 1,37,548


Read Also | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR