மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சிறையும், பெரியார் பஸ் நிலையம் அருகே பழங்கால சுரங்கமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணிகளுக்கா பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கம் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.


குடிநீர் குழாய்கள் அமைக்கு பணிக்காக பள்ளம் தோண்டியபோது மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் பழங்கால சிறைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.


சுரங்கப்பாதையானது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும், கூடலழகர் கோயிலுக்கும் இடையில் அமைந்திருக்கும் பாதையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தகவல்கள் அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த தமிழ்நாடு தொல்பொருள் துறை அதிகாரிகள், பழங்கால தடையங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.