நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளை திறக்கலாம். சலூன், ஸ்பா, அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை எனவும் நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. கடந்த மே 2 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள், பணிகள், மே 11ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக மே 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது.  


எவற்றுக்கெல்லாம் அனுமதி?.. எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை? என்ற பாட்டியை இதோ.... 


  1. டீக்கடைகள் (பார்சல் மட்டும்)

  2. பேக்கரிகள் (பார்சல் மட்டும்)

  3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)

  4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

  5. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்

  6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

  7. மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

  8. மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்

  9. கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

  10. வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

  11. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

  12. கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

  13. சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)

  14. சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்

  15. மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

  16. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

  17. பெட்டி கடைகள்

  18. பர்னிச்சர் கடைகள்

  19. சாலையோர தள்ளுவண்டி கடைகள்

  20. உலர் சலவையகங்கள்

  21. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

  22. லாரி புக்கிங் சர்வீஸ்

  23. ஜெராக்ஸ் கடைகள்

  24. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

  25. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்

  26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்

  27. விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

  28. டைல்ஸ் கடைகள்

  29. பெயிண்ட் கடைகள்

  30. எலக்ட்ரிகல் கடைகள்

  31. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்

  32. நர்சரி கார்டன்கள்

  33. மரக்கடைகள் மற்றும் பிளைவுட்  கடைகள்

  34. மரம் அறுக்கும் கடைகள் 




முடிதிருத்தும் நிலையங்கள், சலூன்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள், கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.