முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் வேகத்தில் புகழேந்தி பேசியதில் காரசாரமான வரிகளை கவனித்துவிட்டு பின்னர் செய்திக்குச் செல்லலாம்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘எடப்பாடி எப்போதும் மன்னன் மகுடம் சூட்ட முடியாது’


‘ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி’


‘இதுவரை இந்தியாவில் ஊழல் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த ஊழல்தான். அவரது ஆட்சியில் மிகப்பெரிய ஊழல்’ 


அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசகரிக்கப்பட்டது. இதில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்ஸின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்ஸின் மனைவியின் திருவுருவப்படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். 


அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,


‘எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை தவறாக வழிநடத்திச் செல்கின்றனர். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் பிசாசு கே.பி முனுசாமி தான். அரசியல் பச்சோந்தி கே பி முனுசாமி.  எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையை செய்து வருகிறார் கே பி முனுசாமி. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி.கே.சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம். அவர் இதை பலமுறை என்னிடம் கூறி வருத்தப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி. 


அவர் மட்டுமல்ல, அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது. தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என்று கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 


இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தான். இரட்டை இலையை முடங்கினாலும் கட்சியே போனாலும் பரவாயில்லை. சுயேச்சையாக நின்று எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளார். நான்காம் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவை மீட்டெடுத்து வழி நடத்துவார்.  


துரோகத்தின் உச்சம் எடப்பாடி. அவருடன் இருப்பவர்கள் எடப்பாடிக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். அவரும், தற்போதைய டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இதில் கைது செய்யப்பட வேண்டும். இதுபோன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விவகாரமும் கசியும்’ என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ஓபிஎஸ் திருந்திவிட்டார்; இபிஎஸ் வாய்ப்பில்லை - பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ