தனது பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனி காரில் சென்று குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


குஜாராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல் மந்திரி, கவர்னர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்களும், அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர்க்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறிய வாழ்த்துச்செய்தி:- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல்லாண்டு வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.