ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் மற்றும் பேனா பரிசு வழங்கிய போலீசார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை விதிமுறைகளை மீறியதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.


இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்த போக்குவரத்து போலீசார் பேனா மற்றும் சாக்லெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.


போலீஸ் அதிகாரியின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.