தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற இருந்த சூழலில் நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா. இவர்களுக்கு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற்றது. பிரதீப் கோவையில் கூலி வேலை செய்துவருகிறார். சோனியா  நிறைமாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார். 



மேலும் படிக்க | தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!


சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தை கணவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை தெரிந்து கொண்ட சோனியா அவருடைய அத்தையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மாமியாரால் தொடர்ந்து சோனியா துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.


இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், நேற்று மர்மமான முறையில் மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த சோனியாவின் உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவயிடத்திற்க்கு வந்த அரூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 


மேலும் படிக்க | பாலாஜிக்கு எதிரான வழக்கு; அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!


இந்த இறப்பில் சந்தேகம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோனியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இது கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR