புதுடில்லி: சமீபத்திய மத்திய அமைச்சர் - சஞ்சீவ் பல்யான் ராஜினாமா செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மந்திரிகளில் உமா பாரதி மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் வியாழக்கிழமை மாலையில் ராஜினாமா செய்தனர். மேலும்அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்போவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், மாநில அமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்.


மேலும் மாநில மந்திரி ஃபேகன் சிங் குலஸ்தா, மஹேந்திரநாத் பாண்டே உட்பட சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யலாம் என ஜீ மீடியாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெறும் BRICS உச்சிமாநாட்டிற்கு கலந்து கொள்ள இருப்பதால், புறப்படுவதற்கு முன்பே, அதாவது நாளை மாலை அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் நடைபெறும் என தெரிகிறது.