பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் சபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என டி.ஐ.ஜி., ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு அறிக்கை அனுப்பினார். 


இதனால் இது குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிக்கு உதவியதாக கூறப்படும் கைதிகள் அங்கிருந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.