சென்னை: தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


1. 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.


2. தனியார் பள்ளிகள் இரண்டு தவணைகளாக பள்ளிக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்


3.  40% கட்டணத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வசூலிக்க வேண்டும்.


4. . 35% கட்டணத்தை பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் வசூலிக்க வேண்டும்.


இவ்வாறு தனியார் பள்ளிகளுக்கு தமிழக கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. 


கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பள்ளிகள் தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. சில தனியார் பள்ளிகள் உடனடியாக கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். 


ALSO READ |  பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


இதனையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் 100 சதவீதம் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும், அவர்களிடம் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும், அதுவும் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR