பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். அதுக்குறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, நவம்பர் 11 ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2020, 04:42 PM IST
  • தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம்
  • நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
  • கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
  • பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை: பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு title=

CHENNAI: தமிழக அரசை பொறுத்த வரை, தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெளிவாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றம், "தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். அதுக்குறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, நவம்பர் 11 ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.

மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா (Coronavirus) அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை பெற்றோர்களிடம் வசூல் செய்தது. இதற்கு தமிழகம் அரசு தடை விதித்தது. இந்த தடைய எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றமத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ALSO READ |  தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

முன்னதாக வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K. Palaniswami) எடுப்பார் என்றும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர், கொரோனா (COVID-19) பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆந்திராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் ஒரு சில மாணவர்களுக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த கல்வி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறைகளால் அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு முதல்வர் அவர்கள் அதுக்குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் கூறினார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News