பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த மே 3 அன்று பொறியியல் பிரிவு படிப்பிற்கான ’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் வரைவோலையாக கட்டணத்தை பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல் இருப்பதாக அண்ணா பல்கலை., தெரிவித்துள்ளது. 


முன்னதாக பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர். 


ஆன்லைன் மட்டும அல்லாமல் ஆப்லைன் முறையிலும் விண்ணப்பங்களைப் பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிறுந்தார்.


இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொறியியல் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகவும் செலுத்தலாம் என்றும், அதை உதவி மையங்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார். 


அண்ணா பல்கலை., பதிலைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யக் கூறி வழக்கைப் பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


இதனிடையே மாலையில் மீண்டும் ஆஜரான வழக்கறிஞர், வரைவோலையாக கட்டணத்தைப் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டார். 


ஆன்லைன் விண்ணப்பத்தில் இதற்கென மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலை., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.